அப்போ இப்போ     -By JBR   - 06.07.2006
 
 
Menu

Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
உளியின் ஓசை
ஆயுதம் செய்வோம்
தசாவதாரம்
அரசாங்கம்
சிலந்தி
குருவி
அறை எண் 305-ல் கடவுள்
தோழா
சந்தோஷ் சுப்ரமணியம்
நேபாளி
யாரடி நீ மோகினி
கோப்புகள்
முன்னோட்டம்
மாஸ்கோவின் காவிரி
குசேலன்
அலிபாபா
யாவரும் நலம்
வண்ணத்துப்பூச்சி
நான் கடவுள்
அந்தோனி யார்
சிவமயம்
சத்யம்
சுப்ரமணியபுரம்
கோப்புகள்
உங்களுக்காக
டாப் 10 பாடல்கள்
மதூர், ப்ரியநந்தனன் - இரு திறமைசாலிகள்
டாப் 10 மூவிஸ்
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
2007-ல் தமிழ் சினிமா - அரைவருட அலசல்
கோப்புகள்

2007-ன் கனவு கன்னி?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!


    
அப்போ
Jayachithra, Kamal

ஜெயசித்ராவின் பூர்வீகம் ஆந்திராவில் உள்ள காக்கி நாடா. அவர் தந்தை மகேந்திரா ஒரு கால்நடை மருத்துவர். வக்கீலாகவும் பணியாற்றியிருக்கிறார். இவர் வேலை நிமித்தமாக சென்னையில் இருந்ததால் ஜெயசித்ரா பிறந்ததும் வளர்ந்ததும் சென்னைதான். தாயார் ஜெயஸ்ரீ. பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் லட்சுமி கிருஷ்ணவேணி ரோகினி பார்வதி தேவி.

ஜெயசித்ராவின் தாயார் ஜெயஸ்ரீ நடிகையாக இருந்தவர். இவர் தமிழில் அறிமுகமான படம், 1955-ல் வெளிவந்த 'மகாவீரன்.' தாயார் நடிகையாக இருந்ததால் தனது ஐந்து வயதிலேயே 'பக்தபோதனா' தெலுங்கு படத்தில் குழந்தை நட்சத்திரமானார் ஜெயசித்ரா.

இவரை தமிழில் அறிமுகப்படுத்தியவர் கே.எஸ். கோபாலகிருஷ்ணன். படம் 'குறத்தி மகன்'. கோபாலகிருஷ்ணன்தான் ஜெயசித்ராவுக்கு பெற்றோர் வைத்த சீன சுவர் பெயரை சுருக்கி 'ஜெயசித்ரா' ஆக்கியவர்.

பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த 'பொண்ணுக்கு தங்க மனசு' (1973) படத்தின் மூலம் கதாநாயகியானார். 'பாரத விலாஸ்' படத்தில் சிவாஜியின் மகளாக நடித்தவர் எம்.ஜி.ஆரின் 'நவரத்னம்' படத்தில் 9 கதாநாயகிகளில் ஒருவராக நடித்தார். கமலுக்கு ஜோடியாக ஜெயசித்ரா நடித்தப்படம் ஸ்ரீதரின் 'இளமை ஊஞ்சலாடுகிறது'. பாலசந்தரின் 'அரங்கேற்றம்' மற்றும் 'சொல்லத்தான் நினைக்கிறேன்' படங்கள் இவரை சிறந்த குணச்சித்திர நடிகையாக்கியது. 1983-ம் வருடம் கணேஷ் என்ற தொழிலதிபரை ஜெயசித்ரா மணந்து கொண்டார்.

இப்போ
இப்போ
Jayachithra

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கதாநாயகியாக வளர்ந்து குணச்சித்திர நடிகையாக புகழ் பெற்ற ஜெயசித்ரா இறுதியில் பணக்கார வில்லியாக ஒடுங்கிப்போனார் என்றுதான் சொல்லவேண்டும். பணக்கார அகந்தை கொண்ட மாமியார் கேரக்டரா கூப்பிடு ஜெயசித்ராவை என்று கூறும் அளவுக்கு அந்த கேரக்டரில் ஜொலித்தார்.

காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்து கட்சிப் பணிகளில் தீவிரமாக செயல்பட்டதால் சினிமாவில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். தற்போது சினிமாவிலிருந்து சுத்தமாக விலகியிருக்கும் ஜெயசித்ரா, தனது மகனை ஹீரோவாக்கும் முயற்சியில் இருக்கிறார்.

அப்போ

 

 
Copyright © 2006   Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us