அந்தளவு பிரபலமாக இருக்கும் இந்த வாசகத்தையே தலைப்பாக்கி ஒரு புத்தகம் வெளிவருகிறது. ரஜினியின் வாழ்க்கை வரலாறான இதனை எழுதியிருப்பவர் டாக்டர் காயத்ரி ஸ்ரீகாந்த்.
ஷாருக்கானைப் பற்றிய புத்தகம் ஒன்றே, ரஜினி குறித்து புத்தகம் எழுதுவதற்கு தூண்டுதலாக இருந்தது எனக் கூறும் காயத்ரி, தனது புத்தகத்தை ரஜினியிடம் வாசிக்கக் கொடுத்து அவரது பாராட்டையும் பெற்றுள்ளார்.
மார்ச் ஒன்றாம் தேதி இந்தப் புத்தகத்தை நடிகர் அமிதாப்பச்சன் சென்னையில் வெளியிடுகிறார். இந்தப் புத்தகத்தில் இரண்டு விசேஷங்கள்.
புத்தகத்துக்கு வாழ்த்துரை எழுதியிருப்பவர் தமிழக முதல்வர் கருணாநிதி. அணிந்துரை எழுதியிருப்பவர் கமல்ஹாசன். ஆங்கிலத்திலும் இப்புத்தகம் வெளிவருகிறது. ஆங்கிலத்தில் புத்தகத்தின் பெயர்,
'தி நேம் இஸ் ரஜினிகாந்த்!'
|