ஓய்வு என்றால் சிலருக்கு இமயமலை. பலருக்கு வெளிநாடு. கமலுக்கோ புதுப்படம், புதுமுயற்சி.
தசாவதாரத்துக்குப் பிறகு மர்மயோகியை கமல் எழுதி இயக்குகிறார். நூறு கோடியை தொட்டுவிடும் சப்ஜெக்ட் என்பதால், தனது ராஜ்கமல் பிலிம்சுடன் கூட்டணி சேர பல கார்ப்பரேட் கம்பெனிகளை அணுகியிருக்கிறார் கமல்.
அதே நேரம் நடிகர்கள் தேர்வை அவர் தொடங்கிவிட்டார். ஹேராமில் துக்கடா வேடத்தில் வந்த ஹேமமாலினிக்கு இதில் பெரிய வேடமாம். கமல் கேட்டதும் பிகு செய்யாமல் ஓகே சொன்னாராம் இந்த முன்னாள் கனவுக்கன்னி.
'மர்மயோகி'யில் கஜோலை நடிக்க வைக்கவும் முயற்சிகள் நடக்கிறது. அவ்வை சண்முகியின் இந்தி ரீ-மேக் சாச்சி 420-யில் கஜோலிடம் காலிஷீட் கேட்டு, அவர் பிஸி என மறுத்த பிறகே தபுவை தேர்வு செய்தார் கமல். அவரைப் பொறுத்தவரை கமல் அவரது கதவை தட்டுவது இரண்டாவது முறை.
திறக்குமா கஜோலின் கதவு?
|