எட்டு இயக்குனர்கள் இணைந்து இயக்கும் படம்
- 03.08.2006
By JBR
தமிழில் சில ஆண்டுகள் முன் வெளியான திரைப்படம் 'சுயம்வரம்'. கின்னஸ் சாதனைக்காக எடுக்கப்பட்ட இந்தப் படத்தை பதினான்கு இயக்குனர்கள் இணைந்து இயக்கினர். படத்தில் மொத்தம் 15 கதாநாயகர்கள். பத்து கதாநாயகிகள். 24 மணிநேரத்தில் மொத்தப்படமும் எடுத்து முடிக்கப்பட்டது.
|
|
|
இதேபோன்று மலையாளத்திலும் ஒரு படம் தயாராக உள்ளது. 'சுயம்வரம்' போல் 24 மணிநேரத்தில் இயக்கி சாதனை புரியும் எண்ணமெல்லாம் அவர்களுக்கு இல்லை. வளர்ச்சி நிதிக்காக இப்படம் தயாராகிறது.
கேரள சினிமா தொவில்நுட்ப கலைஞர்களுக்கான அமைப்பு 'மேக்டா'. இந்த அமைப்பின் வளர்ச்சிக்காக இப்படம் தயாரிக்கப்படுகிறது. மொத்தம் எட்டு இயக்குனர்கள் இப்படத்தை இயக்குகிறார்கள். அவர்கள், பாசில், ப்ரியதர்ஷன், ஜோஷி, ஷாஜி கைலாஷ், சித்திக், வினயன், கமல் மற்றும் பிளெஸ்ஸி.
இந்த எட்டு இயக்குனர்களும் எந்த விஷயத்தில் தனித்துவம் மிக்கவர்களோ, அந்தப் பகுதியை இயக்குவார்கள். உதாரணமாக பாசில் பாடல் காட்சிகளையும், ஷாஜி கைலாஷ் ஆக்ஷ்ன் காட்சிகளையும், சித்திக் காமெடி சீன்களையும் இயக்குகிறார்கள்.
படத்திற்கான கதை விவாதம் தற்போது நடந்து வருகிறது. நடிக, நடிகைகள் யார் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. 'மேக்டா'வின் வளர்ச்சி நிதிக்காக எடுக்கப்படும் திரைப்படம் என்பதால் இயக்குனர்கள் அனைவரும் சம்பளம் வாங்காமல் பணிபுரிகிறார்கள்.
'மேக்டா'வின் வளர்ச்சி நிதிக்காக கொச்சியில் ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சி விரைவில் நடத்தப்பட இருக்கிறது!
|