Home |News |
Gallery
|
Download Font |
Hotnews Video|
Archives
பிரகாஷ்ராஜ் படத்திலிருந்து ரம்யா டர்.....
- 03.12.2009
By Amalan
குத்து ரம்யாவுடன் கூடப்பிறந்த்துபோல கோபம். தற்போது திவ்யா என பெயர் மாற்றியுள்ளவர், எதற்கெடுத்தாலும் சண்டை தடுக்கி விழுந்தால் தர்க்கமென நகர்த்திக்கொண்டிருக்கிறார் தனது கேரியரை.
‘அபியும் நானும்’.தமிழ் நாட்டில் பல்டியடித்த படத்தை கன்னடத்தில் தலை நிமிர்த்தும் முயற்சியில் இறங்கியுள்ளார் பிரகாஷ் ராஜ். படத்திற்கு ‘நானு நன்னா கனசு’ என பெயரிட்டுள்ளார். இதில் தந்தை வேடத்தில் நடிப்பதுடன் இயக்குனர் அவதாரமும் எடுத்துள்ளார்.
தமிழில் த்ரிஷா நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார் திவ்யா. படத்தொடக்க விழாவில் கலந்துகொண்டவர், அதன் பிறகு அட்ரஸே காணோம். நேற்று பெங்களூரில் படப்பிடிப்பு தொடங்கியது. நீண்ட நேர காத்திருப்புக்கு பிறகும் திவ்யா வருவதாகயில்லை. காரணம் என்னவென்று கேட்டபோதுதான் சம்பள பேரம் படியாத தகவல் தெரிந்தது.
இப்போது திவ்யாவின் சம்பளம் 30 லட்சமாம். கதை சொல்லி சம்மதிக்க வைத்ததுடன் சரி. சம்பளம் பற்றி புரொடக்ஷன் தரப்பில் எதுவுமே சொல்லவில்லையாம் ஷூட்டிங் தொடங்குவதற்கு முதல்நாள்தான் இதுபற்றி பேசினார்களாம். திவ்யா கேட்டது முப்பது லகரம். பிரகாஷ் ராஜ் தரப்பில் 16 லட்சம் தருவதாக சொல்ல செம டென்ஷனாகிவிட்டாராம் திவ்யா பேசி முடிவுக்கு வருவதற்கு முன்பே மூக்குமேல் கோபத்தை காட்டியவர், மறுநாள் கம்பி நீட்டிவிட்டாராம். இப்போது திவ்யாவுக்கு பதில் கன்னட நடிகை அமுல்யா நடிக்கிறாராம்.
|