மன்மதன் படத்தில் சமிக்ஷா!
- 04.05.2006
By JBR
அழகு, திறமை, கவர்ச்சி... நடிகைக்குரிய முப்பரிமாணங்கள் இருந்தும் சமிக்ஷாவின் கைவசம் படமில்லை. 'அறிந்தும் அறியாமலும்' படத்தில் அறிமுகமான இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது எஸ். எஸ். ஸ்டேன்லி இயக்கிய 'மெர்குரிப் பூக்கள்' படம். இருந்தும் இன்று இவர் கைவசம் இருப்பது ஒரே ஒரு படம் மட்டுமே, 'மனதோடு மழைக்காலம்'.
|
|
|
'அறிந்தும் அறியாமலும்' படம் வெளியான நேரம், நவ்தீப்புக்கு அக்காபோல் இருக்கிறார் சமிக்ஷா என்று விஷமமாக விமர்சனம் செய்தது பிரபல தமிழ் பத்திரிகையொன்று. இந்த செய்தி சமிக்ஷாவை நிறையவே காயப்படுத்தியது. பிறகு 'அறிந்தும் அறியாமலும்' படத்தில் இவருடன் நடித்த ஆர்யாவுடன் நெருக்கம் அதிகரித்து அது பத்திரிகைகளில் பரபரப்பு செய்தியில் இடம் பிடித்ததும் இவரை டென்ஷனாக்கியது.
இப்போது அதைவிட பெரிய சோகம், ஆர்யா இவரை கண்டு கொள்வதில்லை. ஆர்யாவின் கவனத்தை தவமிருந்து நடிகை கவர்ந்திருப்பதை சமிக்ஷாவால் ஜீரணிக்கமுடியவில்லை என்கிறார்கள். சொந்த வாழ்க்கையில் சோகம் சுமந்துதிரியும் சமிக்ஷாவுக்கு திரை வாழ்க்கையும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. அதனால் பிற மொழிகளிலும் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.
முதல் கட்டமாக கன்னடபடமொன்றில் நடிக்க சமிக்ஷாவுக்கு வாய்ப்பு வாசற்கதவை தட்டியிருக்கிறது. தமிழில் வெளியான சிம்புவின் 'மன்மதன்' கன்னடத்தில் ரீ-மேக் செய்யப்படுகிறது. இதில் ஜோதிகா நடித்த வேடத்தில் சமிக்ஷா நடிக்கிறார். அப்படியே தெலுங்கு, மலையாளத்திலும் தனது தேடுதல் வேட்டையை விரிவு செய்ய திட்டமிட்டுள்ளார் சமிக்ஷா.
சொந்தமடம்.... இல்லையென்றால் சந்தைமடம்!
|