விந்தியா வழக்கில் பரபரப்பு தீர்ப்பு
- 05.02.2008
By JBR
பாலியல் பலாத்கார வழக்கிலிருந்து எப்படி விடுபடுவது என திணறிக் கொண்டிருந்த விந்தியாவுக்கு தித்திப்பான தீர்ப்பு வழங்கியிருக்கிறது நீதிமன்றம்.
|
|
|
விந்தியா தன்னை இருவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக வழக்கு தொடர்ந்ததும் பிறகு, எங்களுக்குள் சமாதானமாகிவிட்டது வழக்கை வாபஸ் வாங்குகிறேன் என பின் வாங்கியதும் பழங்கதை.
பலாத்கார வழக்கில் அப்படியெல்லாம் பின்வாங்க முடியாது என அரசுத்தரப்பு வக்கீல் பிடிவாதம் பிடிக்க, விந்தியாவுக்கு நிச்சயமான திருமணமே நின்றுபோகும் அளவுக்கு பிரச்சனை பெரிதாகியது.
இந்நிலையில் நேற்று இந்த வழக்கில் தீர்ப்புக் கூறிய நீதிபதி, விந்தியாவின் கோரிக்கையை ஏற்று வழக்கை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.
திருமணத்திற்கு இருந்த தடை நீங்கிய மகிழ்ச்சியில் இருக்கிறார் விந்தியா.
|