முக்கியமாக அகலக்கால் வைத்து தயாரித்த இரண்டு திரைப்படங்கள். இரண்டும் மோசமான தோல்வியை சந்திக்க சரணுக்கு கோடிக்கணக்கில் கடன். ஆசையாக கட்டிய வீட்டை விற்று, கடனை அடைத்து, அக்கடா என ரிலாக்ஸ் ஆன நேரம், அடுத்தப் பிரச்சனை.
இது செக் மோசடி. தயாரிப்பு செலவுக்காக ஐம்பது லட்ச ரூபாய் வாங்கியிருக்கிறார் சரண். அந்தக் கடனுக்கு கொடுத்த செக் சரண் கணக்கில் பணம் இல்லாமல் திரும்பி வந்திருக்கிறது. விளக்கம் கேட்டு பணம் கொடுத்தவர் அனுப்பிய நோட்டீசுக்கும் சரண் சரியான பதிலளிக்கவில்லையாம்.
இப்போது பிரச்சனை நீதிமன்றம் வந்துள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதி, சரண் கோர்ட்டில் நேரில் ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.
'மோதி விளையாடு' பட வேலைகளில் பிஸியாக இருக்கும் சரணுக்கு இது, எதிர்பாராத தலைவலி. திருகுவலி ஆகும்முன் தீர்த்து வைத்தால் நல்லது.
|