இதற்காக தாமிரபரணி கரையோரம் மலைவாழ் மக்களின் கிராமம் போன்ற அரங்கு ஒன்றை நாற்பது குடிசைகளுடன் செயற்கையாக உருவாக்கியிருக்கிறார்.
வனம் சார்ந்த கதை என்பதால் படத்தின் இசையில் நவீன இசைக்கருவிகள் அதிகம் பயன்படுத்த வேண்டாம் என இசையமைப்பாளரிடம் கேட்டுக்கொண்டுள்ளார் ஜனநாதன்.
இதுபோன்ற வித்தியாசமான ஐடியாவுக்கு காத்திருந்த வித்யாசாகர் உடனடியாக செயலில் இறங்கி விட்டார். பழங்குடியினரின் வாழ்வோடு ஒன்றியது மூங்கில் மரம். இவர்களுடைய இசைக்கருவிகள் பெரும்பாலும் மூங்கில் சார்ந்ததாகவே இருக்கும். அதனால், வித்யாசாகரும் 'பேராண்மை'யில் மூங்கில் இசைக்கருவிகளை பயன்படுத்துகிறார்.
புதிய வகை இசைக்காக வெளிநாடு போகவும் திட்டம் இருக்கிறதாம். இந்தப் படத்தில் ஜெயம்ரவி வனத்துறை அதிகாரியாக நடிக்கிறார்.
|