படத்தின் முக்கிய கதாபாத்திரமான பசுபதியைகூட படத்தின் விளம்பரங்களில் அதிகம் பயன்படுத்தாமல் ரஜினியை பூஸ்ட் செய்தே 'குசேலன்' வியாபாரத்தை நட்ததிக்காட்டினார் வாசு. நமக்கு லாபம் வந்தால் சரிதான் என வாசுவின் போக்கில் போனது குசேலனை தயாரித்த நிறுவனங்களும்.
ரஜினி படமாச்சே முடிமுதல் அடிவரை எல்லா ரைட்சுகளையும் விற்று காசாக்கிவிடலாம் என கணக்குப்போட்ட பிரமிட் சாய்மீரா நிறுவனமும் 61 கோடிக்கு வாங்கி வெளியிட்டது. இதில் கவிதாலயா மற்றும் செவன்ஆர்ட்ஸ் நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் லாபம் கிடைத்தது. ஆனால், வாங்கி வெளியிட்ட பிரமிட் சாய்மீராவுக்கோ 20 கோடி ரூபாய்வரை கையை கடித்துவிட்டதாக கூறப்படுகிறது.
அதேபோல் அவுட்ரேட் முறையில் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு 50 சதவீதம் வரையும், M.G.முறையில் வாங்கிய தியேட்டர்காரர்களுக்கு 60 சதவீதம் வரையும் நஷ்டத்தை ஏற்படுத்துமாம் குசேலன்.
'சந்திரமுகி' படத்திலும ரஜினிக்கு முக்கியத்துவம் இல்லாத கதைதான். அதுமட்டும் எப்படி ஓடியது? என்று யோசித்தால் குசேலனுக்கு ஏற்பட்ட நெகட்டிவ் சிந்தனைகள்தான் இதன் தோல்விக்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.
ஆரம்பத்திலேயே இது எனது படம் அல்ல என்று ரஜினி அறிவித்ததும், கர்நாடக பிரச்சனையில் ரஜினி ரசிகர்களிடையே ஏற்பட்ட அதிருப்தியும் 'குசேலன்' தோல்விக்கு காரணமாகியுள்ளதாக கூறப்படுகிறது.
ஆகஸ்டில் வெளிவரும் தனது படங்கள் பெரிய தோல்வியை சந்திக்கும் என்ற ரஜினியின் செண்டிமென்ட் ஆரூடமும் பலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
|