|
|
| Hotnews! |
|
|
| [an error occurred while processing this directive]
|
Home |News |
Gallery
|
Download Font |
Hotnews Video|
Archives
இன்னொரு சினேகா…இதயம் பறிக்கும் நந்தனா
- 07.01.2012
By Amalan
தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை பதிவு செய்யப்படாத பஞ்சாலை தொழிலாளர்களின் பின்னணி பக்கங்களை திறந்து காட்டும் புத்தகமாக ‘கிருஷ்ணவேனி பஞ்சாலை’ படத்தை இயக்கியுள்ளார் அறிமுக இயக்குனர் தனபால் பத்மநாபன். படத்தின் இரண்டு பாடல்களை பார்க்க நேர்ந்ததில் செதுக்கியுள்ளார் என்றே சொல்லவேண்டும்.
மில் தொழிலாளர்களின் வாழ்க்கை சந்தோஷங்களையும், வலிகளையும் பதிவு செய்யும் இப்படத்தின் கதை 70களில் நடப்பதுபோன்று அமைக்கப்பட்டுள்ளது. வருடங்கள் பின்னோக்கி செல்லும் கதையை படமாக்குவதில் எத்தனை சிரமம் என்பது தெரிந்ததே. இயக்குனர் உள்ளிட்ட படக்குழுவினரின் உழைப்பையும் சிரத்தையையும் படத்தின் புகைப்படங்களே பிரதிபலிக்கிறது.
‘நான் கோயம்புத்தூர்காரன்தான். என் தந்தை ஒரு மில் தொழிலாளியாக இருந்தவர். மில் தொழிலாளர்களின் பின்னணியில் ஒரு கதையை உருவாக்க அதுவே காரணங்களாக அமைந்தன. இந்த படம் தொடங்குவதற்கு முன்பே காஸ்டிங் டைரக்டர் ஒருவரை தேர்வு செய்ய நினைத்தோம். (கதைக்கு ஏற்ற பொருத்தமான நடிகர்களை தேர்வு செய்யும் பொறுப்பு.) அதற்கு நடிகர் சண்முகராஜ்தான் சரியான ஆள் என்று நினைத்து அவரிடம் பொறுப்பை ஒப்படைத்தோம். எதிர்பார்த்தது போன்ற கலைஞர்களை சண்முகராஜ் தேர்வு செய்து கொடுத்தது நான் எதிர்பார்த்தது போல படம் உருவாக காரணமாக இருந்தது” என்ற இயக்குனர், இன்னொரு புது முயற்சியாக இந்த படத்திற்காக எம்.பி.ஏ மாணவர்களை கொண்டு மார்க்கெட்டிங் உத்தியை கையாண்டுள்ளார்.
ம்.. இப்போ நடிகர்கள் பற்றி வருவோம். ஹேமச்சந்திரன், நந்தனா ஆகிய புது முகங்களே படத்தின் நாயகன், நாயகி. கொஞ்சம் என்லார்ஜ் ஆன சினேகா போல இதயம் பறிக்கிறது நந்தனாவின் அழகு முகம். பாவனைகளிலும் பஞ்சம் வைக்காமல், பஞ்சாலை தொழிலாளியாக உருமாறி நடித்துள்ளது ஒரு சில ஃபிரேம்களிலேயே தெரிகிறது.
நடிப்பும், அழகும் ஒருங்கே இருக்கும் நடிகைகள் கிடைப்பது அரிது. ஆகவே இயக்குனர்களே நந்தனாவை கவனத்தில் கொள்ளவும்!
|