மலையாளத்தில் வெளியான 'கதபறயும் போள்' படம், தமிழ் தெலுங்கு இரு மொழிகளிலும் ரஜினி நடிக்க ஒரே நேரத்தில் ரீ-மேக் செய்யப்பட்டு வருகிறது. ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளை பி.வாசு எடுத்து முடித்துவிட்டதால் ஜூலை மாதம் பதினெட்டாம் தேதியே படம் திரைக்கு வந்துவிடும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
'குசேலன்' படத்திற்காக ஏறக்குறைய ஆயிரம் பிரிண்டுகள் போட உள்ளனர். தமிழ், தெலுங்கு இரு மொழிகளுக்கும் சேர்த்து இந்த எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.
படப்பிடிப்பே இன்னும் முடியாத நிலையில் படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு உரிமையை பிரமிட் சாய்மீரா நிறுவனம் வாங்கியுள்ளது. இரண்டுக்கும் சேர்த்து அவர்கள் அளித்த விலை, அதிகமில்லை அறுபத்து நான்கு கோடிகள்தான்!
ஆக, படப்பிடிப்பு முடியும் முன்பே குசேலனின் தயாரிப்பாளர்களை குபேரனாக்கியிருக்கிறது ரஜினியின் இந்தப் படம்.
|