தமிழில் 'வில்', 'நியூட்டனின் மூன்றாம் விதி' படங்களில் நடித்துவரும் எஸ்.ஜே.சூர்யா 'புலி' படத்தை பவன் கல்யாணை வைத்து தெலுங்கில் இயக்குகிறார் எஸ்.ஜே.சூர்யா. 'புலி' விஜய் நடிக்க மறுத்த கதை என்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கு 'புலி'யில் பவன்கல்யாண் ஜோடியாக கரீனா கபூர் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாயின. எஸ்.ஜே.சூர்யா இயக்கிய இந்தி 'குஷி'யில் கரீனா கபூர் நடித்திருந்தார். அதனால் 'புலி' புரளியை எல்லோரும் நம்பினர்.
அதே நேரம் இந்திதவிர பிறமொழி படங்களில் தற்போதைக்கு நடிப்பதில்லையென, 'புலி' செய்தியை மறுத்துள்ளார் கரீனா கபூர். இந்திப் பட வாய்ப்புகளே நிறைய வருகின்றன. அவற்றில் நடிப்பதே முடியாத நிலையில், பிறமொழிகள் குறித்து யோசிக்கவே முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளார்.
தெலுங்கு 'புலி' முடிந்ததும் அதே கதையை தமிழ், இந்தியில் இயக்குகிறார் எஸ்.ஜே.சூர்யா. இரண்டிலும் அவரேதான் ஹீரோ!
|