எத்தனையாவது பிறந்த நாள் என்பது அவருக்கும், அவரது பெற்றோருக்கும் மட்டும் தெரிந்த ரகசியம் என்பதால் மற்ற விஷயத்திற்கு வருவோம்.
சொந்த ஊருக்கோ, ஷூட்டிங் ஸ்பாட்டுக்கோ செல்லாமல் 50 ஆதரவற்ற குழந்தைகளுடன் கேக் வெட்டிக் கொண்டாடிய இடம் சென்னை தீவுத்திடலில் நடக்கும் ஸ்நோ பால்.
வழக்கம்போலவே முழங்காலுக்கு கீழும், முதுகு புறத்திற்கும் சுதந்திரம் கொடுத்திருந்த ஆடை வடிமைப்பில் கறுப்பு நிற உடையில் மதியம் 2.30 மணிக்கு ஸ்நோ பாலுக்கு வந்தார் நமீதா.
அங்கிருந்த ஆள் உயர கேக்கை வெட்டி ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஊட்டி மகிழ்ந்தார். அதனைப் படம் பிடித்த பத்திரிகை போட்டோ கிராஃபர்கள் சிலருக்கும் நமீதா கேக் துண்டுகளை ஊட்ட கிறங்கிப்போனார்கள் போட்டோ கிராஃபர்கள். சிறிது நேரத்தில் போட்டோ கிராஃபர்கள் மத்தியில் தள்ளுமுள்ளு ஏற்பட மேடையின் ஓரம் உடைந்து கீழே விழுந்து 'புதையல்' எடுத்தனர் சில போட்டோ கிராஃபர்கள்.
இதனையடுத்து ஸ்நோ பாலில் அமைக்கப்பட்டுள்ள பனிமலைக்குச் சென்ற நமீதா ஐஸ்கட்டி மழையில் நனைந்தார். இது ஸேநோ பாலுக்கு வந்த பார்வையாளர்களுக்கு கூடுதல் கண்காட்சியாக இருந்தது.
நேரம் ஆக ஆக கூட்டம் கூடவே நமீதாவின் ஸ்பரிசத்திற்காக அவரை நெருங்க ஆரம்பித்தனர் ரசிகர்கள். இதனால் போலீஸார் தடியடி நடத்த நமீதாவும், நாமும் எஸ்கேப்...
|