|
|
| Hotnews! |
|
|
| [an error occurred while processing this directive]
|
Home |News |
Gallery
|
Download Font |
Hotnews Video|
Archives
அட பிண்ணிட்டாய்ங்கப்பா… ‘அட்ட கத்தி’ தந்த அதிர்ச்சி
- 11.01.2012
By Amalan
‘அட்ட கத்தி’ தானே என அசால்ட்டாக இருந்த நேரத்தில் பட்டாக் கத்தியாய் பளபளப்பு காட்டியது, படத்தின் பாடல்களும், டிரைலரும்.
வடசென்னைதான் கதைக் களம். வால் முளைத்த கல்லூரி மாணவர்களே பாத்திரங்கள் என ‘அட்ட கத்தி’க்கு திரைக்கதை முலாம் பூசியிருக்கிறார் அறிமுக இயக்குனர் பா.ரஞ்சித். வெங்கட்பிரபுவிடமிருந்து இறக்கை முளைத்து வந்த கிளி இவர். புதுமுகம் தினேஷ் நாயகன். நந்திதா ஐஸ்வர்யா, ஷாலி என முதல் படத்திலேயே மூனு ஜோடிகள் தினேஷுக்கு. டிரைலரை பார்த்தபோது அறிமுகங்கள் என்ற சுவடே தென்படவில்லை. அம்புட்டு இயல்பு நடிப்பில். “பருத்திவீரன் கார்த்தியையும் பிரியாமணியையும் பார்த்தமாதிரியே இருக்கு” என பாடல் வெளியீட்டு விழாவில் ஒரு வி.ஐ.பி பேசியதே அவர்களுக்கான நற்சான்றிதழ்.
இப்போ பாடல்வெளியீட்டு விழாவிற்கு வருவோம்.
சந்தோஷ் நாராயணன் என்ற புதியவர்தான் படத்தின் இசையமைப்பாளர். மேடையில் லைவ்வாக சில பாடல்களை அரங்கேற்றி அப்ளாஸ் வாங்கிக்கொண்டார். ‘ஆடி போனா ஆவனி நீ ஆள மயக்கும் தாவணி…” என்ற கபிலன் எழுதிய கானா பாடல் ஒன்றை பாடகர் பாலா பாடி காட்ட, அரங்கமே அதிர்ந்தது. பாட்டு நிச்சயம் ஹிட்டு.
சிஷ்யர் ரஞ்சித்தை வாழ்த்த வந்திருந்த வெங்கட்பிரபு, வஞ்சகமில்லாமல் பாராட்டவும் செய்தார். ‘சென்னை 28’ எடுப்பதற்கு முன்னதாகவே ரஞ்சித்தை எனக்கு தெரியும். அப்போ நான் லிங்குசாமி இயக்கத்தில் ‘ஜி’ படத்தில் நடித்துக்கொண்டிருந்தேன். லிங்குசாமியிடம் உதவி இயக்குனராக சேர்த்துவிடச்சொல்லி என்னை அடிக்கடி சந்தித்தார் ரஞ்சித். அவர் தலையெழுத்து (சிரிக்கிறார்) என்னிடமே உதவி இயக்குனராக சேரும்படி ஆயிற்று. என்னிடமிருந்து வந்தவர் இப்படிப்பட்ட படம் எடுத்திருக்காரு என்று நினைக்கும்போது சந்தோஷமா இருக்கு” என்று நெகிழ, குருவை கட்டிபிடித்து அன்பை வெளிப்படுத்தினார் இயக்குனர் ரஞ்சித்.
|