விஜய்யின் ஆரம்ப காலத்தில் அவரை வைத்து தொடர்ந்து படம் எடுத்து அவரது முகத்தை ரசிகர்களிடம் ரெஜிஸஸ்டர் செய்தவர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர். நடிகர் பிரசாந்த் 'வைகாசி பிறந்தாச்சு' படத்தில் அறிமுகமானதும் அவரது வளர்ச்சியில் கவனம் செலுத்துவதற்காக நடிப்புக்கு முழுக்கு போட்டவர் அவரது தந்தை தியாகராஜன். இப்படி தந்தைக்குலங்களின் தியாகத்தை சொல்லிக் கொண்டே போகலாம்.
லேட்டஸ்ட்டாக தனது மகன் சாந்தனுவை வைத்து 'புதிய வார்பபுகள்' படத்தை இயக்கி வருகிறார் சாந்தனுவின் தந்தை பாக்யராஜ். அவரை தொடர்ந்து அவரது சிஷ்யர் பாண்டியராஜனும் தனது மகனை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார்.
பாண்டியராஜனின் மகன் ப்ருதிவி ஏற்கனவே 'கை வந்த கலை' படத்தில் நடித்திருக்கிறார். தற்போது 'வைதேகி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து பாண்டியராஜன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார்.
ப்ருதிவியின் முதல் படத்தில் தந்தை பாண்டியராஜனின் நடிப்பு ஸ்டைலில் தெரிந்தது. இனி அந்த தவறு இருக்காது என்று உத்தரவாதமளித்துள்ளார் பாண்டியராஜன்.
|