இந்த வழக்கத்தை மாற்றி அவரை நல்ல தந்தையாக நடிக்கவைத்துள்ளார் புதுமுக இயக்குனர் ஸ்ரீஹரி. சுந்தர் சி.யிடம் உதவியாளராக இருந்துள்ள இவர் அடிப்படையில் ஒரு ஓவியர். ஆர்ட் டைரக்டர் ஜி.கே.யின் ஆரம்பகாலத்தில் அசிஸ்டெண்டாக வேலைசெய்த ஸ்ரீஹரி இப்போது இயக்குனர் பிரமோஷன் அடைந்துள்ளார்.
எதிரெதிர் வீட்டில் வசிக்கும் இரண்டு இளசுகளுக்குள் பூக்கும் காதலை பற்றியதுதான் படத்தின் கதையாம். "ரொம்ப வித்தியாசமான படம் சார்" என சம்பிரதாய பெருமையடித்துக் கொள்ளாமல் "ஒரு காதல் கதையை புதுசா ட்ரை பண்ணியிருக்கேன் சார்" ஸ்ரீஹரி அடக்கி வாசிக்கும்போதே அவர்மீது நம்பிக்கை வருகிறது.
நாயகன், நாயகியாக ரத்தன் - மஞ்சு ஆகிய புதுமுகங்கள் அறிமுகமாகின்றன. கோட்டா சீனிவாசராவை வில்லனாகவே பார்த்து பழகிய கண்களுக்கு இந்தப் படத்தில் சர்ப்ரைஸ் காத்திருக்கிறதாம். யெஸ், நாயகனின் நல்ல தந்தையாக நடித்துள்ளாராம் கோட்டா.
"தமிழ் சினிமாவின் இலக்கணமாக திகழும் குத்துப்பாட்டு, இரட்டை அர்த்த வசனங்கள், சண்டைக்காட்சி, முத்தக் காட்சி போன்ற சமாச்சாரங்கள் இதில் அறவே இருக்காது" என சத்தியம் செய்யாத குறையாக சொல்கிறார் இயக்குனர் ஸ்ரீஹரி.
புதுமுக இசையமைப்பாளர் ஜாக் ஆனந்தின் இசையில் பாடல்களும் பிரமாதமாக வந்திருக்கிறதாம். ஸ்ரீஹரியின் மேல் நம்பிக்கை வைத்து தாராள செலவு செய்திருக்கிறாராம் தயாரிப்பாளர் ஷங்கர் வி.ராஜன்.
|