'பிருந்தாவனத்தில் நந்தகுமாரன்' புதுப்பட பூஜை - படங்களுடன்
13.10.2005
By: Amalan
'பிருந்தாவனத்தில் நந்தகுமாரன்' - தலைப்பே கவிதையாக இருக்கும் இப்பபடத்தில் பிரதான நடிகர்களுடன் மூன்று புதுமுகங்கள் அறிமுகமாகின்றனர்.
|
சந்தோஷ் - கௌதம் என்னும் இளைஞர்கள் கதாநாயகர்களாக நடிக்க 'யாமிருக்க பயமேன்' நாயகி மானஸா ஜோடி சேர்கிறார்.
பிரஷாந்தை வைத்து 'அடைக்கலம்' படத்தை இயக்கிய R. புவனராஜா கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்குகிறார்.
படத்தின் தொடக்கவிழா ஏவிஎம் ஏசி அரங்கில் நடந்தது. படத்தின் பெயருக்கு ஏற்றவாறு விழாவின் நுழைவு வாயிலில் குட்டி பிருந்தாவனம் செட் போடப்பட்டு பார்ப்பவர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.
விழாவில் இயக்குனர்கள் ஆர்.வி. உதயக்குமார், பி.வாசு, மகாராஜன், கே.எஸ். அதியமான், இசையமைப்பாளர் சபேஷ் முரளி, நடிகர் செந்தில் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு வாழ்த்தினர்.
பட்டுப்புடவை பளபளக்க குடும்ப குத்துவிளக்குபோல இருந்த நாயகி மானஸாவுக்கு பழைய நிரோஷாவை ஞாபகப்படுத்தும் முகம்.
வந்திருந்து வாழ்த்தியவர்களை ஏ.ஆர். ஜி..எஸ். இன்டர்நேஷனல் தயாரிப்பாளர்களும், இயக்குனர் புவனராஜாவும் வரவேற்றனர்.
|