மலையாள 'மணிசித்ரதாழ்' படத்தின் கன்னட உரிமையை வாங்கி 'ஆப்தமித்ரா' என்ற பெயரில் கன்னடததில் ரீ-மேக் செய்தார் பி.வாசு. பிறகு அதே கதை தமிழில் ரஜினி நடிக்க 'சந்திரமுகி'யானது.
'மணிசித்ரதாழின்' இந்தி உரிமையை வாங்கி 'பூல் புலையா' என்ற பெயரில் இந்தியில் ரீ-மேக் செய்தார் ப்ரியதர்ஷன். இது பி.வாசுவுக்கு பிடிக்கவில்லை. ப்ரியதர்ஷன் 'சந்திரமுகி'யை காப்பி அடித்ததாக குற்றம் சாட்டினார். பிரச்சனை வழக்கு வரை சென்றது.
தற்போது 'கதபறயும்போள்' படத்தை 'குசேலன்' என்ற பெயரில் தமிழிலும் 'குசேலடு' என்ற பெயரில் தெலுங்கிலும் ரீ-மேக் செய்து வருகிறார் பி.வாசு. 'குசேலனை' இந்தியில் டப் செய்து வெளியிடும் எண்ணமும் அவருக்கு உண்டு.
அந்த எண்ணத்தில் மண்ணள்ளி போடுவதுபோல 'கதபறையும்போள்' படத்தை 'பில்லு பார்பர்' என்ற பெயரில் ரீ-மேக் செய்கிறார் ப்ரியதர்ஷன். 'பில்லு பார்பர்' முந்திக்கொண்டால் 'குசேலன்' இந்தி டப்பிங் எடுபடப் போவதில்லை. ஷாருக்கா, ரஜினியா என்ற ஸ்டார் வார் ஒருபுறம் ஸ்டார்ட் ஆன நிலையில் 'குசேலனை' எடுக்க திட்டமிட்ட அதே பொள்ளாச்சி லொகேஷனில் படப்பிடிப்பை நடத்தப் போகிறாராம் ப்ரியதார்ஷன்.
பனிப்போர் இதனால் பெரும் போராக வெடிக்கலாம் என்கிறார்கள்.
|