ஷங்கர் அந்தவகையில் ஓர் இரட்டைச் சுழிக்காரர். அவர் இயக்கும் படங்களைப் போலவே தயாரிக்கும் படங்களும் சோடை போவதில்லை.
'அறை எண் 305-ல் கடவுள்' படத்தை தயாரித்துவரும் ஷங்கர் அடுத்து 'பொய்' வசனகர்த்தா தாமிரா இயக்கும் படத்தை தயாரிக்கிறார். இந்தப் படத்துக்கு 'இரட்டைச் சுழி' என பெயர் வைத்துள்ளார்கள்.
தாமிராவின் முதல்படமான இது குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. குழந்தைகளை மையபடுத்திவரும் படங்கள் குறைவு. சரியாகச் சொன்னால் அந்தவகைப் படங்கள் தமிழிலேயே இல்லை.
தாமிராவின் படம் குழந்தைகளைப் பற்றியது என்பதாலும், தயாரிப்பது ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் என்ற காரணத்தினாலும் திரையுலகில் இப்போதே ஆர்வத்தை துண்டியுள்ளது.
|