'தீ நகர்' படத்திற்குப் பிறகு புதிய படம் எதுவும் கரண் நடிப்பில் வெளிவரவில்லை. 'காத்தவராயன்' அதன் கடைசிக்கட்ட வேலையில் இருக்கிறது.
கரணுடன் விதிஷா, ராதா நடித்திருக்கும் இப்படத்தில் கந்துவட்டிக்கு பணம் கொடுப்பவராக நடித்துள்ளார் வடிவேலு.
'காத்தவராயனை' தொடர்ந்து 'காளி' எனும் படத்தில் நடிக்கிறார் கரண். 'காளி' என்று பெயர் வைத்த அனைத்து தமிழ்ப் படங்களும் பெரிய விபத்தையோ, உயிரிழப்பையோ சந்தித்திருக்கின்றன. இந்த சென்டிமெண்டை மீறி 'காளி' டைட்டிலில் உறுதியாக இருக்கிறார் கரண்.
சரணின் அசிஸ்டெண்டும் எழுத்தாளருமான திருவாரூர் பாபு கரணை வைத்து ஒரு படம் இயக்குகிறார். படத்துக்கு 'கந்தா' என பெயர் வைத்துள்ளனர். திருவாரூர் பாபு சினிமாவுக்காக தனது ஒரிஜினல் பெயரான பாபுசந்திரனுக்கு மாறியிருக்கிறார்.
|