பாசில் இயக்கத்தில் ஸ்ரீகாந்த்
- 17.05.2008
By JBR
'பூ', 'இந்திரவிழா', 'எட்டப்பன்'. இவை தவிர தெலுங்கில் மூன்று படங்கள். ஷிப்டு வைத்து நடித்துக் கொணஅடிருக்கிறார் ஸ்ரீகாந்த். திருமணத்துக்குப் பிறகு அதிர்ஷ்டத்தின் வாசல் இவருக்கு விரிய திறந்திருக்கிறது.
|
|
|
கை நிறைய படங்கள் இருக்கும் ஸ்ரீகாந்திற்கு மெய் நிறையும் விதமாக வாய்ப்பு ஒன்று வந்துள்ளதாம். மென்மையான உணர்வுகளை மட்டும் திரைப்படங்களாக்கிவரும் இயக்குனர் பாசில் மீண்டும் தமிழுக்கு திரும்புகிறார்.
இந்த முறை அவர் ஸ்ரீகாந்தை ஹீரோவாக வைத்து படம் இயக்குவார் என பலமான பேச்சு. பாசில் எடுக்கும் கதையில் அம்மா வேடம் ஒன்று வருகிறது. அதில் நடிக்க மந்த்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வருகின்றன.
'ப்ரியம்' முதலானப் படங்களில் நாயகியாக நடித்த மந்த்ரா, உதவி இயக்குனர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து, சினிமாவிலிருந்தே விலகியிருந்தார். நாயகியாக விலகியவர் அம்மாவாக திரும்பி வருகிறார்.
நடிகைகளின் ஹீரோயின் ஆயுட்காலம் ரொம்ப கம்மிதான்!
|