|
|
| Hotnews! |
|
|
| [an error occurred while processing this directive]
|
Home |News |
Gallery
|
Download Font |
Hotnews Video|
Archives
தங்கர்பச்சானும் பச்சோந்தி மாற்றமும்
- 17.07.2012
By Ram
மைக்குல பேசுறது, திரையில் செண்டிமெண்ட்டாக கதை சொல்வது என சினிமாவுக்குள் இருக்கும் தங்கர்பச்சான் தங்கம்தான். ஆனால் வெளியில் இருக்கும் தங்கரின் இன்னொரு குணம் தகரத்தை காட்டிலும் தரம் குறைந்தவை.
தற்போது சாந்தனு நடிக்கும் ‘அம்மாவின் கைப்பேசி’ படத்தை இயக்கி வருகிறார் தங்கர். இதற்கு முன் அவர் இயக்கிய முந்தைய படங்களுக்கு இசையால் உயிர் கொடுத்தவர் இளையராஜா. ஆனால் இந்த முறை வடநாட்டு இசையமைப்பாளர் ஒருவரை இசையமைக்க வைத்திருக்கிறார் தங்கர். ஏனிந்த மாற்றம் என்று சமீபத்தில் நடந்த பிரஸ்மீட்டில் தங்கரிடம் கேட்டபோது அவரது பதிலில் வெளிப்பட்டது பச்சோந்தித்தனமே.
“நான் இயக்கிய படங்கள் உலகத்தரம் வாய்ந்தவை. ஆனால் அது உலக அளவில் சென்றடையவில்லை. அதற்கு காரணம் இசைதான். உலக தரத்திற்கு இசை இல்லாமல் போனதே என் படங்கள் சர்வதேச அளவில் ரீச்சாகாமல் போனதற்கு காரணம். அதனால்தான் இந்த முறை மும்பை இசையமைப்பாளரை இசையமைக்க வைத்திருக்கிறேன்.’’ என்று வாய்க்கொழுப்பாக பேசி ராஜாவின் ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளார்.
|