ராஜசேகரன் அடிப்படையில் ஒரு ஓவியர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டை முன்னிட்டு மிகப்பிரம்மாண்டமான ஈசல் ஓவியம் ஒன்றை உருவாக்கினார் ராஜசேகரன். இஎம்எஸ் நம்பூதிரிபாடின் இந்த உருவ ஓவியம் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.
இந்தியாவில் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவரான அடூர் கோபாலகிருஷ்ணனிடம் அவரின் 'நிழல்குத்து' திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார் ராஜசேகரன். அவரின் கலையார்வத்தால் ஈர்க்கப்பட்ட அடூர் தனது 'மோகனியாட்டம்' உள்பட சில ஆவணப் படங்களுக்கு ராஜசேகரனை கலை இயக்குனராக்கினார். ராஜசேகரன் கலை இயக்குனராக பணிபுரிந்த முதல் முழுநீள திரைப்படம், அடூரின் 'நாலு பெண்ணுங்ஙள்'. நந்திதாதாஸ், பத்மப்ரியா உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படம் மலையாள எழுத்தாளர் மறைந்த தகழி சிவசங்கர பிள்ளையின் கதைகளை பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.
ஐம்பதுகளின் கேரள வீடுகளை, கலாசாரத்தை கண்முன் கொண்டு வந்த ராஜசேகரனின் கலை இயக்கத்திற்கு 2007-ம் ஆண்டுக்கான கேரள அரசின் சிறந்த கலை இயக்கத்திற்கான விருது கிடைத்தது. ராஜசேகரனுக்கு நமது வாழ்த்துகள்!
|