'மர்ம யோகி' - ஆட்டம் ஆரம்பம்
- 18.09.2008
By JBR
'மர்மயோகி'யின் வேலைகள் துரித கதியில் முடுக்கி விடப்பட்டுள்ளது.
|
|
|
தசாவதாரத்திற்குப் பிறகு அதைவிட அதிக பொருட் செலவில், அதைவிட பிரமாண்டமாக கமல் 'மர்மயோகி'யை உருவாக்குகிறார். தசாவதாரத்தில் வந்த ரங்கராஜன் நம்பி சம்பந்தப்பட்ட சரித்திர பகுதி, மர்மயோகிக்கான முன்னோட்டம் என்ற ரீதியில் பேட்டியொன்றில் குறிப்பிட்டார் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார். 'மர்மயோகி'யின் பிரமாண்டத்திற்கு கே.எஸ்.ரவிக்குமாரின் விளக்கம் சிறிய உதாரணம்.
சரித்திர கதையான 'மர்மயோகி'யில் ஹேமமாலினி, த்ரிஷா, ஸ்ரேயா, வையாபுரி ஆகியோர் நடிக்கின்றனர். பிற நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் படத்துக்கு இசையமைக்கிறார். படத்திற்கு தேவையான பாடல்கள் குறித்து ரஹ்மானிடம் ஏற்கனவே விளக்கியிருக்கிறார் கமல்.
பிரமிட் சாய்மீரா, ராஜ்கமல் பிலிம்ஸ் இணைந்து மர்மயோகியை தயாரிக்கிறது. முதல் கட்டமாக கமல், த்ரிஷா, ஸ்ரேயா ஆகியோரை வைத்து போட்டைசெஷன் நடத்தப்பட்டது. மூவரும் சரித்திரகால உடையில் விதவிதமான மேக்கப்பில் இருக்கும் புகைப்படங்கள் இந்த போட்டோசெஷனில் எடுக்கப்பட்டன. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஸ்டுடியோவில் இந்த போட்டோசெஷன் ரகசியமாக நடத்தப்பட்டது.
|