ரஜினி, ஷங்கர் என இரண்டு பழுத்த மரங்கள் இருப்பதால் இத்தனை கல்லடியும், சொல்லடியும்!
சில நாட்கள் முன்பு ரோபோ கதை திருடப்பட்டதாக திகில் வதந்தி ஒன்றை கிளப்பினார்கள் சிலர். உண்மையைவிட இந்த வதந்தி நம்பத் தகுந்ததாக இருந்ததால் ஷங்கர் அலுவலகத்திலும் பீதியின் நிழல்.
விஷயம் இதுதான். இந்தியில் 'லவ் ஸ்டோரி 2050' என்ற பெயரில் ஒருபடம் தயாரானது. கால எந்திரத்தின் மூலம் 2050-ம் ஆண்டுக்கு செல்லும் காதல் ஜோடி ஒன்றின் கதை. பிரிந்த காதலர்களை ரோபோ ஒன்று சேர்த்து வைக்கும்.
படத்தின் கதை வெளியானதும், ஷங்கரின் ரோபோ கதைதான் இது. அவர் இந்தி படவுலகை சேர்ந்த சிலருக்கு கதை சொன்னபோது, எப்படியோ லீக்காகி 'லவ் ஸ்டோரி 2050' என்ற பெயரில் எடுத்துவிட்டனர் என கிளப்பி வி்ட்டனர். ஷங்கர் தரப்பில் இதற்கு மவுனமே பதிலாக அமைய, வதந்தியை உண்மை என்றே நம்பினர்.
ஆனால், இந்திப் படத்தின் கதைக்கும் ரோபோவுக்கும் சம்பந்தம் இல்லையாம். முக்கியமாக லவ் ஸ்டோரி 2050 ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை. இதனால் ஷங்கர் உள்பட அனைவருக்கும் நிம்மதி.
கதை வேறாக இருந்தாலும் லவ் ஸ்டோரி 2050 போன்ற Sci-Fi படத்தின் வெற்றி ரோபோ மீதான எதிர் பார்ப்பை குறைக்கும். ப்ரெஷ்னெஸ் மங்கிப் போகும். லவ் ஸ்டோரியின் தோல்வியால் இரண்டும் தவிர்க்கப்பட்டிருக்கிறது.
|