சென்னையில் இலங்கை பட விழா
- 22.07.2008
By JBR
சென்னையில் இலங்கை பட விழா 4 நாட்கள் நடக்கிறது.
|
|
|
இதன் தொடக்க விழா, சென்னை பிலிம்சேம்பர் தியேட்டரில் நேற்று மாலை நடந்தது. விழாவில் இலங்கை தூதரக உயர் அதிகாரி அம்சா கலந்து கொண்டு பட விழாவை தொடங்கி வைத்தார்.
விழாவுக்கு இந்திய திரைப்பட திறனாய்வு கழக தலைவர் கே.கண்ணன் தலைமை தாங்கினார்.சிறப்பு விருந்தினர்களாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் சிவசக்தி பாண்டியன், நடிகர் ஸ்ரீகாந்த், அவருடைய மனைவி வந்தனா ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
விழா முடிவில் திரைப்பட திறனாய்வு கழகசெயலாளர் தங்கராஜ நன்றி கூறினார்.
நேற்று தொடங்கிய இலங்கை பட விழா, தொடர்ந்து 24-ந் தேதி வரை நடைபெறுகிறது. பல விருதுகளை பெற்ற 'தீர்த்த யாத்ரா', 'சுது செவனெலி', 'சக்மன் மலுவ', 'சூரிய அரண்', 'கம்பெரலிய' ஆகிய புகழ்பெற்ற சிங்கள திரைப்படங்கள். இந்த விழாவில் திரையிடப்பட உள்ளன.
|