சூட்டை கிளப்பியுள்ள 20-20 கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் நட்சத்திர அம்பாசிடராக நியமிக்கப்பட்டுள்ளார் விஜய். இன்றைய தினம் சென்னை சேப்பாக்கத்தில் களம் காண்கிறது சூப்பர் கிங்ஸ் அணி. இதனையொட்டி நேற்று நிருபரகளை சந்தித்த விஜய் டோனியை அன்பு பாராட்டி பேசினார்.
"இந்திய அணி விளையாடும் போட்டிகளில் டோனியின் ஆட்டத்தை கண்டு ரசிப்பேன். உலக அளவில் அவரது வளர்ச்சி விஸ்வரூபம் எடுத்துள்ளது. அவரை முதன்முதலில் நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தபோது, எனக்குள் இனம் புரியாத பரவசம் தொற்றிக்கொண்டது. அந்த தருணங்கள் மறக்கமுடியாத அனுபவம்.
என்னை அவர் சந்தித்தபோது எனது படங்களின் பெயரைச் சொல்லி அந்த படங்களை பார்த்து ரசித்ததாக கூறினார். நான் நடனமாடிய பாடல்களின் வரிகளையும் நினைவில் வைத்து பாடிக்காட்டினார். தலைசிறந்த வீரராக இருக்கும் டோனி எவ்வித பந்தாவும் இல்லாமல் என்னிடம் எளிமையாகவும் அன்பாகவும் பழகினார். எங்களுக்குள் ஆரோக்கியமான நட்பு மலர்ந்திருப்பதை நினைத்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது" என டோனியை வாயார புகழ்கிறார் விஜய்.
இந்த பேட்டியி்ன் போது கேப்டன் டோனியும் உடனிருந்தார்.
|