பிரான்ஸ் அரசாங்கம் எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரினுக்கு விருது ஒன்றை அறிவித்துள்ளது. அதேபோல் கலைத்துறையினருக்கான 2007-ம் ஆண்டுக்கான விருதுக்கு ஷாருக்கானை தேர்வு செய்துள்ளது பிரான்ஸ் அரசாங்கம்.
பிரான்ஸ் ஜனாதிபதி நிகோலஸ் சர்கோஸி இந்தியாவின் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இந்தியா வருகிறார். இந்த வருகையின் போது மேற்சொன்ன இருவருக்கும் இந்தியாவில் வைத்தே விருது அளிக்க சம்மதமா என பிரான்ஸ் அரசாங்கம் இந்திய அரசிடம் கேட்டிருந்தது.
வங்க எழுத்தாளர் தஸ்லிமா மீது சிலர் வேண்டுமென்றே தாக்குதல் நடத்தி வருவதாலும், புதியதொரு சர்ச்சையை எதிர்கொள்ள பயந்தும், தஸ்லிமாவுக்கு இந்தியாவில் வைத்து நிகோலஸ் சர்கோஸி விருது அளிக்க இந்திய அரசு மறுத்துள்ளது. வேறு எந்த நாட்டில் வைத்து தஸ்லிமாவுக்கு விருது கொடுத்தாலும் அவரது பயணச் செலவை இந்திய அரசு ஏற்கும் என பசப்பு வேறு.
அதேநேரம் ஷாருக்கானுக்கு விருது அளிக்க சம்மதம் தெரிவித்துள்ளது இந்திய அரசு.
சினிமாவுக்கு வெளியேயும் எழுத்தாளர்களின் மரியாதை பேணப்படுவதில்லை என்பதற்கு இது இன்னொரு சான்று.
|