ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யா. சின்ன வயசிலிருந்தே கம்யூட்டர் மேல் காதல் கொண்டிருந்த இவருக்கு திரைப்படத்துறையில் தொழில்நுட்பத்தில் சாதிக்கவேண்டுமென்பது லட்சியம். அப்பா நடித்த படங்களின் காஸ்ட்யூம் வடிவமைப்பு, அனிமேஷன் ஆகிய தொழில்நுட்பங்களை செய்துவந்தார்.
'பாபா', 'சந்திரமுகி', 'சிவாஜி' என கொஞ்சம் கொஞ்சமாக தனது அடுத்த ஸ்டெப்புகளை எடுத்துவைத்த சௌந்தர்யா ரஜினி 'சுல்தான் தி.வாரியர்' என்னும் அனிமேஷன் படத்தை இயக்கியுள்ளார். இதில் ரஜினியின் மாடலே கதாநாயகன்.
விரைவில் வெள்ளித்திரையிலும் இயக்குனர் அவதாரமெடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சௌந்தர்யா, இப்போது அந்த எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்துவிட்டார். இந்த படத்தை தயாரிக்கப்போகிறது வார்னர் பிரதர்ஸ் நிறுவனம். ஹாலிவுட்டில் பிரசித்த பெற்ற இதனுடன் இணைந்து சௌந்தர்யாவின் ஆக்கர் ஸ்டூடியோவும் தயாரிக்கிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் சௌந்தர்யா இயக்கவுள்ள அப்படங்களை ஆக்ஷ்ன் கதையாக இருக்குமாம். இதற்காக மூன்றுவருட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள சௌந்தர்யாரஜினி, மேற்கண்ட தகவல்களை உறுதிசெய்துள்ளார்.
|