'அண்ணி' சீரியலில் இணை இயக்குனராக பணிபுரிந்த சமுத்திரகனி 'உன்னைச்சரணடைந்தேன்' படம்மூலம் இயக்குனரானார். தற்போது ராதிகாவின் 'அரசி' தொடரை இயக்கிவருகிறார்.
இப்படி சீரியல் பக்கம் ஒதுங்கியிருந்தவரை சினிமாவுக்கு மீண்டும் அழைத்துள்ளார் இயக்குனர் சசிகுமார். இவர் இயக்கும் 'சுப்பிரமணியபுரம்' படத்தில் சமுத்திரகனி வில்லனாக நடிக்கிறார். இதனைத்தொடர்ந்து ராடான் டி.வி.தயாரிக்கும் ஒரு படத்தை இயக்குகிறார்.
இந்த படம் முடிவடைந்ததும் அபிநயா கிரியேஷன்ஸ் தயாரிக்கும் 'நாடகம்' என்ற புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதில் இவருக்கு இரட்டைவேடமாம். 150 கிலோ உடம்பை உடைய பயில்வான் தோற்றம். 80 கிலோ எடையுள்ள சராசரி மனிதன் என இருவித தோற்றத்தில் வருகிறாராம்.
இதற்காக தினமும் கடுமையான உடர்பயிற்சியை செய்துவரும் சமுத்திரகனி, இதுவரை 10 கிலோ எடையை குறைத்துள்ளார்.
அமீர் தயாரிப்பில் சமுத்திரகனி ஒரு படம் இயக்குவதாக இருந்து பின்னர் அந்த திட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில் அமீர் நடிக்கும் யோகி படத்தில் சமுத்திரகனி வில்லனாக நடிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
|