இது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது :-
ஆரம்பத்தில் இருந்தே நயன்தாராவுக்கு இந்த விஷயத்தில் ஆர்வம் இல்லை. சரியான ஒத்துழைப்பு தரவில்லை. பத்திரிகையாளர் கூட்டத்தை தவிர்த்துவிட்டார். அணியின் அறிமுக நிகழ்ச்சியின்போது அவர் கலந்துகொண்டார் என்றாலும், எல்லாரையும் உற்சாகப்படுத்தவேண்டிய பொறுப்பில் இருந்த அவரே அவ்வளவு உற்சாகமாக இல்லை.
ஐதராபாத்தில் 'குசேலன்' படப்பிடிப்பில் திடீரென மயங்கி விழுந்து ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டதால் இங்கே நடந்த முதல் போட்டிக்கு நயன்தாரா வர இயலவில்லை என்ற காரணம் நம்பும்படியாக இல்லை. மயங்கி விழுந்து அட்மிட் ஆனவர் 2 மணி நேரத்தில் திரும்பிப்போய் படப்பிடிப்பில் மீண்டும் கலந்து கொள்ள முடிந்தது எப்படி?
ஒவ்வொரு போட்டிக்கும் நயன்தாராவுடன் வந்து வீரர்களையும் ரசிகர்களையும் உற்சாகப்படுத்தப்போவதாக மைதானத்தில் விஜய் அறிவித்தார். அதன் பிறகாவது நயன்தாரா தனது பொறுப்பை உணர்ந்திருக்க வேண்டும். எனவேதான் அவரை நீக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சர்வதேச அளவில் கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களிடம் அறிமுகமாகும் வாய்ப்பை நயன் இழந்து விட்டார். இவ்வாறு நிர்வாகம் கூறியுள்ளது.
நயன்தாரா விலக்கப்பட்டு அந்த இடத்துக்கு த்ரிஷா வருவது குறித்து விஜய் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. "சூப்பர் கிங்ஸ் இனிமேல் கில்லிதான்" என்று ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர் குறிப்பிட்டார். த்ரிஷாவின் ரசிகர்களும் கிரிக்கெட் பார்க்க திரண்டு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
|