கதிரின் புதிய படம்
- 26.08.2008
By JBR
இதயம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக நுழைந்தவர் கதிர்.
|
|
|
A.R.Rehman
'காதல் தேசம்', இவரின் திறமைக்கு சான்று. 'காதல் வைரஸ்' படத்திற்குப் பிறகு சில வருடங்களாக படம் இயக்குவதிலிருந்து ஒதுங்கி இருந்தார் கதிர். ஒரு மாறுதலுக்காக அவரே ஏற்படுத்திக் கொண்ட இடைவெளி.
ஓய்வு முடிந்து மீண்டும் படம் இயக்க வந்திருக்கிறார் கதிர். ஐங்கரன் இண்டர்நேஷனல்ஸூக்கு இவர் சொன்ன கதை பிடித்துள்ளதாம். வினய் நாயகனாக நடிக்கலாம்.
ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்களை அதன் அழகும் பிரமாண்டமும் குலையாமல் படமாக்கும் ஒருசில இயக்குனர்களில் கதிரும் ஒருவர். 'காதல் தேசம்', 'காதலர் தினம்' படங்களின் வெற்றிக்கு இசைப்புயலின் இசையும் ஒரு காரணமாக அமைந்தது. புதிய படத்திலும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க வேண்டும் என்பதே கதிரின் ஆசை.
'ஏகன்', 'வில்லு', 'போராண்மை', 'சர்வம்' ஆகிய படங்களை தயாரி்தது வரும் ஐங்கரன் 'பிப்ரவரி 14' படத்தின் இயக்குனர் ஹோசிமின் இயக்கும் படம் ஒன்றையும் தயாரிக்கிறதாம். நடிகர் நடிகைகள் இன்னும் தேர்வு செய்யப்படாத இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
|