---Artistgallery2---
செந்தில் கதாநாயகனாக நடிக்கும் படம் 'ஆதிவாசியும் அற்புத பேசியும்'. மாலன் இயக்கும் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க மீனாவிடம் கால்ஷீட் கேட்கப்பட்டது.
போயும் போயும் நான் செந்திலுக்கு ஜோடியாக நடிப்பதா, என ஆரம்பத்தில் நடிக்க மறுத்துவிட்டர் மீனா. ரஜினி, கமல், போன்ற பெரிய ஹீரோக்களுடனெல்லாம் நடித்த தான் செந்திலுடன் நடித்தால் இமேஜ் போய்விடும் என்பதே மீனாவின் மறுப்புக்கு காரணம்.
இதனையடுத்து படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனரும் மீனாவை சந்தித்து கதையை சொல்லி ரமேஷ்அரவிந்துக்கு ஜோடியாக தான் நடிக்கப்போகிறீர்கள் என விளக்கம் அளித்துள்ளனர். இதனையடுத்து 'ஆதிவாசியும் அற்புத பேசியும்' படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் மீனா.
படத்துக்காக இன்று மலேசியா செல்லும் மீனா அதுபற்றி கூறியதாவது:-
நான் கடைசியாக நடித்த படம் 'கண்ணம்மா' அதன் பிறகு நல்ல வேடங்கள் கிடைக்காததால் எந்த படத்திலும் நடிக்கவில்லை. டி.வி. தொடரில் மட்டும் கவனம் செலுத்தினேன். இடையில் சில தெலுங்கு, மலையாள படங்களில் கதாநாயகியாக நடித்தேன்.
'ஆதிவாசியும் அற்புத பேசியும்' படத்தில் எனக்கு முக்கியமாக வேடம். எனவே அதில் நடிக்க ஒப்புக் கொண்டேன். இதில் ரமேஷ் அரவிந்துக்கு ஜோடியாக நடிக்கிறேன்.
|