கரும்பு தோட்டத்தில் காயங்களுடன் விஜயலட்சுமி
- 27.12.2007
By ---Intials---
இந்த மாதம் நடிகைகள் அடிபடும் மாதம் போல தெரிகிறது. கார்த்திகா, 'தோழா' படத்தில் நாயகி சாகித்யாவை தொடர்ந்து நடிகை விஜயலட்சுமியும் படப்பிடிப்பில் காயமடைந்துள்ளார்.
|
|
|
---Artistgallery2---
நேமி சந்த் ஜபக், வி. இதேஷ் ஜபக் தயாரிக்கும் படம் 'அஞ்சாதே' மிஷ்கின் இயக்கும் இப்படத்தில் நரேன். பிரசன்னா, விஜயலட்சுமி நடிக்கின்றனர். இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி தென்காசியிலுள்ள கரும்பு தோட்டத்தில் நடந்தது.
வில்லன் ஆட்கள் விஜயலட்சுமியை துரத்துவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. கரும்பு தோட்டத்துக்குள் ஓடியபோது அங்கிருந்த சோகைகள் விஜயலட்சுமியின் கைகளை கிழித்தன. அவரது கைகளிலிருந்து ரத்தம் கொட்டியது. அதற்குள் காட்சியும் படமாகிவிட்டது. பின்னர்தான் விஜயலட்சுமிக்கு காயம் ஏற்பட்டது தெரிந்தது. உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் ஓய்வு எடுத்து வருகிறார்.
இதுபற்றி விஜயலட்சுமி கூறுகையில், 'கரும்பு தோட்டத்தில் நிறைய பாம்பு இருக்கும் என எச்சரித்தார்கள். அப்போதே பயம் வந்துவிட்டது. அந்த பயத்தில் ஓடியபோது கரும்பு சோகைகள் என் கைகளை கிழித்தன. காட்சி முடிந்தபின் கையை பார்த்த போது ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. ஒரு வார ஓய்வுக்கு பின் படப்பிடிப்பில் கலந்துகொள்வேன்' என்றார்.
|