---Artistgallery2---
விஜய், சூர்யா, கார்த்தி, சிம்பு, சிபிராஜ், இப்படி கலையுலக வாரிசுகளாக களமிறங்கி கலக்கிக் கொண்டிருக்கும் ஹீரோக்கள் லிஸ்ட்டை எடுத்தால் கிலோ மீட்டர் தூரத்திறகு நீளம். அதன் நீளத்தை அதிகரிக்க இன்னும் சில வாரிசுகளும் தயாராகி வருகின்றனர்.
ஒரு காலத்தில் காதல் நாயகனாக வலம் வந்தவர் கார்த்திக். அவருடைய சமகால நடிகர்களெல்லாம் இப்போதும் பந்தயத்தில் ஓடிக் கொண்டிருக்க, கார்த்திக்கிற்கு மட்டும் பாதியிலே மூச்சிறைத்து நின்றுவிட்டார்.
இப்போதும் தனக்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் கிரேஸை மகனுக்கு மாற்றிவிட திட்டமிட்டுள்ள கார்த்திக் அடுத்த ஆண்டு மகனை சினிமாவில் அறிமுகப்படுத்தவுள்ளாராம்.
மோகனுக்கு அடுத்தபடியாக மைக் என்றாலே ஞாபகத்திற்கு வருவது முரளிதான். இப்போதும் கல்லூரி மாணவன் கேரக்டர் என்றால் வெட்கப்படாமல் ஒத்துக்கொள்ளும் அளவிற்கு நீண்ட காலமாக அதுபோன்ற கதைகளில் நடித்தவர். இவருக்கும் இப்போது வாய்ப்புகள் வராததால் தனது மகன் விஜய்யை இரண்டு வருடங்களில் கதைநாயகனாக களமிறக்க திட்டமிடடுள்ளாராம். தற்போது மகனின் பைலட் படிப்பிற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
கிளிசரின் இல்லாமலேயே அழுது நடிக்க வேண்டிய காட்சிகளில் நிஜமாகவே களங்கடிக்கும் குணசித்திர நடிகர் ராஜேஷ். இவருடைய மகன் தீலீப்பை 'கனவுக்குள் கனவு' படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்துகிறார்.
|