ஸ்பெல் பவுண்ட் மற்றும் தமி்ழ்நாடு சுற்றுலா கழகம் இணைந்து 'ஸ்நோ பால்' என்ற பெயரில் சென்னை தீவுத்திடல் பிரம்மாண்ட பனி உலகம் ஒன்றை உருவாக்கியுள்ளது. மே 1-ந் தேதி முதல் ஜூன் 1ந் தேதிவரை நடைபெறவுள்ள பனி உலகம் மூன்று கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.
அரண்மனை போன்ற வடிவமைப்பில், எண்பதாயிரம் சதுர அடியில் உருவாக்கப்பட்டுள்ள இதில் பனிச்சறுக்கு விளையாட்டு, குழந்தைகளை குதூகலப்படுத்தும் வீடீயோ கேம்ஸ், பொம்மை ரயில் பயணம், கார் டிரைவிங், மேஜிக ஷோ என பொழுதுபோக்கு அம்சங்கள் பல இடம் பெறுகிறது.
பெரியவர்களை கவரும் வண்ணம், நடனம் மற்றும் இசை நிகழ்ச்சியும் தினமும் அரங்கேற்றப்படும். 20 ஆயிரம் சதுர அடியில் காஷ்மீரைபோன்ற குளிர்பிரதேசமும் இடம்பெறுகிறது. ரூ.150 முதல் டிக்கெட்டின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த டிக்கெட் விலையிலேயே அத்தனை கொண்டாட்டங்களையும் அனுபவிக்க முடியும்.
சென்னை மக்களையும், சுற்றுலா பயணிகளையும் கவர்ந்திழுக்கப்போகும் ஸ்நோ பாலின் நட்சத்திர தூதராக நமீதா நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் இதற்காக நடந்த பத்திரிகையாளர்களின் சந்திப்பில் பேசிய நமீதா "ஸ்நோபாலுக்கு வரும்போது குறைந்த ஆடையில் வரமாட்டேன். ஏனென்றால் அது குளிர் பிரதேசம் போல் இருக்கும். எனவே உடல் முழுவதையும் மறைக்கும் உடையணிந்து கொண்டுதான் வருவேன்" என்றார்.
மேலும் விபரங்களுக்கு :- 9444736518 & 9381284844
|