ஜாக்கிசான் மிகவும் எளிமையானவர், ஜாலியானவர், நகைச்சுவை ததும்ப பேசக்கூடியவர். தசாவதாரம் விழாவுக்கு வரும்வரை ஜாக்கிசானை பற்றிய நமது எண்ணம் இப்படித்தான் இருந்தது. ஆனால், ஜாக்கிசானின் அடாவடிகளை நேரில் பார்த்தவர்கள் சிலர் வேறுமாதிரியாக கூறுகிறார்கள். இதுபற்றி நாளிதழ் ஒன்றில் வெளியாகியுள்ள செய்தி வருமாறு :-
கேசட் ரிலீஸ் விழாவா என்று முதலில் தயங்கி இருக்கிறார். இந்தியாவுக்கு வர ஆர்வமே இல்லை. கோடிக்கணக்கில் பணம் தருவதாக ஒப்புக்கொண்ட பிறகே சம்மதித்துள்ளார்.
சென்னையில் அவர் தங்குவதற்கு 5 நடசத்திர ஓட்டலில் அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கே சீன உணவு உட்பட எல்லா நாட்டு உணவு வகைகளும் புகழ்பெற்ற சமையல் நிபுணர்களால் தயாரித்து வழங்கப்படும். ஆனால், ஜாக்கிசான் அதெல்லாம் வேண்டாம் என கூறிவிட்டார். "இந்திய சாப்பாடு எல்லாம் எனக்கு ஒத்து வராது" என்று ஹாங்காஙகில் இருந்து சமையல்காரர்களை தன்னோடு அழைத்து வந்திருந்தார்.
குடிப்பதற்கு படுசுத்தமான மினரல் வாட்டர் பாட்டில்கள் வழங்கப்பட்டாலும், இந்திய தண்ணீரே வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு, வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த மினரல் வாட்டர் வோண்டும் என பிடிவாதமாக கேட்டு வாங்கியிருக்கிறார்.
உங்களைப் பார்க்க வெளியே ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். நட்சத்திரங்களும் ஆவலாக இருக்கிறார்கள் என்று சொன்னபோது, யாரையும் சந்திக்க முடியாது என மறுத்துவிட்டார். ரெஸ்ட் எடுக்கணும் எனறு கூறி் விட்டு, பிரமாண்டமான ஏர் கண்டிஷன் அறைக்குள்ளேயே இருந்துவிட்டார். இந்திப் பட கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத் மட்டுமே ஜாக்கிசானுடன் அந்த அறையில் இருந்தார். அவ்வப்போது வெளியே தலைகாட்டிவிட்டு சென்றார் மல்லிகா.
வேறு யாரும் ஜாக்கியின் அறைக்குள் போக முடியவில்லை. ஓட்டலின் அதே தளத்தில் தங்கியிருந்த மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டிக்கும் 'நோ' சொல்லிவிட்டார். கோடிகளை கொட்டிக் கொடுத்து சென்னைக்கு அவரை வரவழைத்த 'தசாவதாரம்' தயாரிப்பாளர்கூட ஜாக்கியின் அறைக்கு போகவோ, அவருடன் பேசவோ முடியவில்லை. அவரே மல்லிகா மூலம்தான் ஜாக்கிசானுக்கு தகவலையும் சொல்ல முடிந்தது.
விழா நடந்த ஸ்டேடியத்துக்கு சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்ட மல்லிகா, எல்லாம் ஓ.கே என்று சொன்ன பிறகுதான் ஜாக்கி வெளியே வந்திருக்கிறார். "இந்தியாவின் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனும் இந்த விழாவுக்காக வந்திருக்கிறார். அவரை சந்திக்க விரும்புகிறீர்களா?" என்று நிருபர்கள் கேட்ட போது, 'பச்சனா' யாரது? அப்படி யாரையும் எனக்கு தெரியாது என்று அலட்சியமாக கூறியிருக்கிறார் ஜாக்கிசான்.
ஆனால், மேடையில் போசும்போது எல்லோரையும் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.
|