|
'ஓம் ஹாந்தி ஓம்' படம் மூலம் பாலிவுட்டின் கனவு கன்னியாகிவிட்ட தீபிகாவின் ஆரம்பம் விளையாட்டு துறைதான். பேட்மிட்டனில் உலக சாம்பியனாக வேண்டும் என்ற கனவு பாதியிலேயே கலைந்து போக மாடலிங் துறைக்கு தாவினார்.
17 வயதில் இவர் நடித்த லிரில் சோப் விளம்பரமே தீபிகாவுக்கும் நல்ல விளம்பரம் தேடித் தந்தது. அப்புறமென்ன இந்தியாவின் நம்பர் ஒன் மாடல் விருதெல்லாம் வீடு தேடி வர ஆரம்பித்தது.
கன்னடப் படமான 'ஐஸ்வர்யா'தான் தீபிகாவுக்கான சினிமா அறிமுகம். படம் பிளாப் ஆனாலும் 'ஓம் ஹாந்தி ஓம்' வாய்ப்பு கிடைத்ததே முதல் படத்தை வைத்துதானாம். சரியா நடிப்புவராம நம்மூர் பாரதிராஜா ஸாரி சாமி ஸ்டைலில் டைரக்டர் பராகான் கிட்ட பலநாள் டோஸ் வாங்கி கட்டிக்கொண்டாராம். படம் வெளி வந்து தீபிகாவின் புகழ் பரவியதால் பட்ட கஷ்டமெல்லாம் பறந்தோடிவிட்டதாம்.
அதெல்லாம் இருக்கட்டும் டோனி, யுவராஜ்சிங்குனு காதலர் பட்டியல் நீளுதே? என்று கேட்டால் ஆத்திரப்படாமல் பதில் சொல்கிறார்.
"பேசிக்கா நான் ஒரு விளையாட்டு வீராங்கனையாக இருந்தவள். எல்லா விளையாட்டும் எனக்கு பிடிக்கும். கிரிக்கெட்டும் அப்படித்தான். டோனி, யுவாராஜின் ஆட்ட நேர்த்தி என்னை கவர்ந்தது. அதனால் அவர்களுடன் நட்பாக பழகினேன். இது பார்ப்பவர்கள் கண்களுக்கு தவறாக தெரிந்தால் நானென்ன செய்யமுடியும்" என்கிறார்.
இப்ப சொல்லுங்க தீபிகா படுகூல்தானே!
|