மலையாளப் படங்களில் நடிக்க மீரா ஜாஸ்மினுக்கு தடை?
- 30.04.2008
By Amalan
'டுவெண்டி டுவெண்டி' பட விவகாரம் தொடர்பாக மீரா ஜாஸ்மினுக்கு மலையாள நடிகர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்கு உரிய விளக்கம் தராவிட்டால் மலையாளப் படங்களில் நடிக்க தடைவிதிக்கப்படும் என கூறப்படுகிறது.
|
|
|
மலையாள நடிகர்கள் சங்க நலநிதிக்காக 'டுவெண்டி டுவெண்டி' என்ற படம் தயாரிக்கப்படுகிறது. இதில் மம்மூட்டி, மோகன்லால், நயன்தாரா உட்பட அனைத்து மலையாள நடிகர், நடிகைகளும் நடிக்கின்றனர். மீரா ஜாஸ்மினிடம் நடிக்க கேட்டபோது, பிசியாக இருப்பதால் தேதி இல்லை என்று கூறிவிட்டார்.
மலையாள சினிமாவால் புகழ் பெற்ற மீரா, அம்மொழி கலைஞர்களுக்கு ஒத்துழைக்க மறுத்தது பலருக்கு அதிர்ச்சி தந்தது. அவர் மலையாளப் படங்களில் நடிக்க தடை விதிக்க வேண்டும் என நடிகர் சங்கத்தினர் கருத்து தெரிவித்தனர். தடை பற்றி கவலைப்பட வில்லை என மீரா கூறினார். இதையடுத்து இப்பிரச்சனையில் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக மீராவுக்கு மலையாள நடிகர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
"மீரா ஜாஸ்மினைவிட பிசியானவர் நயன்தாரா. தென்னிந்திய நடிகைகளில் அவர்தான் முன்னணியில் உள்ளார். அவரே எங்களுக்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறார். எட்டு நாள் கால்ஷீட் இல்லை என மீரா சொல்வது வேடிக்கையாக உள்ளது. அவருக்கு பதில் பாவனா நடிக்கிறார்" என்று நடிகர் திலீப் கூறினார்.
|