Home |News |
Gallery
|
Download Font |
Hotnews Video|
Archives
'எந்திரன்' - படத்தின் பாடல் வெளியீட்டு விழா கோலாலம்பூரில் நாளை நடக்கிறது!!!
- 30.07.2010
By Mani
ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள "எந்திரன்" படத்தின் பாடல் வெளியீட்டு விழா மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் மிகவும் பிரமாண்டமான முறையில் நாளை நடக்கிறது.
ஷங்கர், ரஜினி, ரஹ்மான், சன் பிக்சர்ஸ் என மெகா கூட்டணி என்பதால் ரசிகர்கள் மத்தியில் ஆர்வமும் அதிகமுள்ளது. எந்திரனின் உத்தேச பட்ஜெட் 190 கோடிகள் என தயாரிப்பாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இதுவரை எந்தத் தமிழ்ப் படத்திற்கும் இல்லாத வகையில் மிக பிரமாண்டமானதாக பாடல் வெளியீட்டு விழாவை திட்டமிட்டுள்ளனராம். கோலாலம்பூரில் உள்ள புத்ரஜெயா அரங்கத்தில் இந்த நிகழ்ச்சி இரவு 7.30 மணிக்கு (உள்ளூர் நேரப்படி) நடைபெறவுள்ளது.
இந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், ஷங்கர், ஏ.ஆர்.ரகுமான் மற்றும் இந்தியாவில் உள்ள பல முக்கிய பிரபலங்கள் கலந்துகொள்கிறார்கள். உலகின் மிகச்சிறந்த கலைக்குழுக்கள் இதில் பல நிகழ்ச்சிகளை நடத்த இருக்கின்றன.
கேட்பவர்களை மயக்கும் விதத்தில் ஒவ்வொரு பாடலையும் வித்தியாசமாக உருவாக்கியுள்ளார் ஆஸ்கர் விருது பெற்ற இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். பாடல்களை வைரமுத்து, பா. விஜய் எழுதியுள்ளார்.
மலேசியா என்பதால் பங்கேற்க இயலாத முதல்வர் கருணாநிதி, இந்த விழாவில் முதல்வர் கருணாநிதியின் வாழ்த்தும் இருந்தால் நன்றாக இருக்கும் என தயாரிப்பாளர் தரப்பு கருத, கலைஞர் தொலைக்காட்சி அரங்கத்தில் "எந்திரன்" படத்தைக் குறித்து முதல்வர் பேசும் வீடியோ காட்சிகள் படமாக்கப்பட்டது. இந்தக் காட்சி கோலாலம்பூர் விழாவில் திரையிடப்படுமாம்.
இந்த பிரமாண்ட விழாவுக்கான ஏற்பாடுகளில் எச்பிஓ நிறுவனம் முக்கியப் பங்கு வகிக்கிறது. உலகளாவிய அளவில் "எந்திரன்" படத்தை இந்த நிறுவனம்தான் திரையிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இசை வெளியீட்டு விழாவுக்குப் பிறகு, "எந்திரன்" ரிலீஸாகும் தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.
|