* "ஆண் - பெண் உறவுகளுக்கான நாகரீக எல்லைக்கோடு கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் அந்த நாகரீக கோட்டை புதுப்பிப்பதற்கான முயற்சியை இப்படம் மூலம் எடுத்திருக்கிறேன்" என்கிறார் இயக்குனர் மாரிமுத்து.
* சத்தியமூர்த்தி என்னும் கதாபாத்திரத்தில் பிரசன்னாவும், ஆனந்தி என்னும் கதாபாத்திரத்தில் உதயதாராவும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
* உடும்பன் கேரக்டரில் வடிவேலுவின் காமெடி வயிறு குலுங்க சிரிக்கவைக்கும் என்பது உறுதியாம்.
* கதையின் களம் குற்றாலம் என்பதால் அருவிக்கு அருகிலேயே கதாநாயகியின் வீடு போன்ற செட் போடப்பட்டு படமாக்கப்பட்டுள்ளது.
* ஒரு காட்சியில் நீர், நிலம், நெருப்பு, வானம், காற்று இந்த பஞ்சபூதங்களும் ஒரே ஷாட்டில் இடம்பெறுவது போன்று அழகாக படமாக்கியுள்ளாராம் ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம். இதற்கு கலை இயக்குனர் பிரபாகரனும் உதவியாக இருந்துள்ளாராம்.
* கதாநாயகிக்கு பின்னணிகுரல் கொடுத்துள்ள ரேணுகா, உணர்ச்சிபூர்வமான காட்சியில் ஒன்றிப்போய் நிஜமாகவே அழுதுவிட்டாராம்.
* ஸ்கிரின்ப்ளே எண்டெர்டெயின்மெண்ட் படநிறுவனம் சார்பில் M.R. மோகன்ராதா, B.S. ராதாகிருஷ்ணன் தயாரித்துள்ளனர்.