* கார்த்திக்ஜெய் மூவிஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் கார்த்திக்ஜெய் நடித்துள்ளார்.
* 'உயிர்' படத்துக்குப் பிறகு சாமி இயக்கியிருக்கும் படம்.
* ஆதி எனும் தெலுங்கு நடிகர் முதன் முதலாக தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார்.
* ஆதியின் மனைவியாக பத்மப்ரியா. மரம் ஏறுவது, கணவனை நெஞ்சில் எட்டி மிதிப்பது என ஆண் தன்மையுள்ள வேடம் இவருக்கு.
* கதாநாயகன் இறுதியில் எய்ட்ஸால் இறப்பது போலவும், அவனது உடலை ஊரார் எரிக்க மறுக்க, தனியாளாக அவனது மனைவி இறுதிச் சடங்கு செய்வதாகவும் படத்தில் ஒரு காட்சி வருகிறது.
* பாடல்கள் நா. முத்துக்குமார். ஒரு பாடலில் அதிக நெருக்கம் காட்டி நடித்துள்ளார் பத்மப்ரியா.
* இதன் படப்பிடிப்பில் பத்மப்ரியா கன்னத்தில் சாமி அறைந்ததற்காக அவருக்கு தமிழில் படம் இயக்க ஒரு வருடம் தடை விதிக்கப்பட்டது.