* தங்கர்பச்சான் சில ஆண்டுகளுக்கு முன் எழுதிய 'ஒன்பது ரூபாய் நோட்டு' நாவலே, அதே பெயரில் திரைப்படமாக்கப்பட்டுள்ளது,
* சத்யராஜ் மாதவர் படையாச்சி என்ற கேரக்டரில் நடித்துள்ளார்.
* அவரது மனைவியாக நடித்திருப்பவர் அர்ச்சனா.
* படையாச்சியின் நண்பராக வரும் முஸ்லிம் கதாபாத்திரத்தில் நாசர் நடித்துள்ளார்.
* அவரது மனைவியாக ரோகினி நடித்துள்ளார்.
* பரத்வாஜ் இசையில் வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார்.
* சினிமாவுக்கு எடிட்டிங் செய்வதை சிலகாலமாக நிறுத்தியிருந்த B.லெனின், 'ஒன்பது ரூபாய் நோட்டு' கதைக்காக, மீண்டும் எடிட்டராகியிருக்கிறார்.
* ஒரு காட்சியில் கோவணம் மட்டும் கட்டி நடித்துள்ளார் சத்யராஜ்.
* சத்யராஜின் நடிப்பைப் பார்த்த அர்ச்சனா, தேசிய விருது நிச்சயம் என்று கூறியுள்ளார்.