ஒரு கல்யாணம். அதற்காக அழைக்கப்பட்ட சுற்றமும் நட்புகளுக்குமிடையே ஏற்படும் காதல்,மோதல் ரிலே ரேஸை வைத்துக்கொண்டு ‘மஞ்சள் வெயிலை’ ஒளிரவிட்டிருக்கிரார் இயக்குனர்.
பிரசன்னாவும் சந்தியாவும் உடன் படித்தவர்கள். சந்தியாவின் அக்காவான தாரிகாவின் திருமணத்துக்காக ஊட்டிக்கு வருகிறார்கள் இருவரும். வந்த இடத்தில் மாப்பிள்ளை ஆர்.கேவை சப்பு கொட்டவைக்கிறது சந்தியா மேல் உள்ள ஆசை. எனவே தாரிகாவை கொன்றுவிட்டு தனது ஆசையை நிறைவேற்ற திட்டம் தீட்டுகிறார்.
விஷயம் லீக்காகவே சந்தியாவை அழைத்துக்கொண்டு சென்னைக்குப் போகிறார் பிரசன்னா. அப்படின்னா பிசன்னா லவ்வர்தானே.. என்று நினைக்கும்போது சந்தியாவின் லவ்வர் பாலா என்ற முடிச்சை போடுகிறது திரைக்கதை. இப்போ பாலா காணாமல்போக, அவரை தேடிப்போகிறார் பிரசன்னா. இன்னொரு பக்கம் சந்தியாவுக்கு வலைவிசுகிறார் வில்லன் ஆர்.கே. நடப்பது என்ன? க்ளைமாக்ஸில் கிடைக்கிறது விடை.
கதையும், இயக்குனரும் கிழித்த கோட்டை தாண்டாத பிரசன்னாவின் நடிப்பு அழகு. அவருக்கும் சந்தியாவுக்குமிடையேயான நட்பில் போடப்பட்டிருக்கும் நாகரீக நாற்காலிக்காக இயக்குனரை பாரட்டலாம். பிரசன்னாவின் கேரக்டருக்கு குண்டுமணியும் குறைவைக்காத சந்தியாவின் கேரக்டருக்கும் சொல்லலாம் சபாஷ்.
அவ்வபோது கதையில் விழும் முடிச்சுகள், படத்திற்கு பலம். எனினும் தேசியநெடுஞ்சாலையில் மாட்டுவண்டியின் வேகத்தில் போவதைபோன்ற விறுவிறுப்பில்லாத திரைக்கதை, அலுப்பூட்டுகிறது.
இந்த குறையை தவிர்த்திருந்தால் ‘மஞ்சள் வெயில்’ பிரகாசித்திருக்கும்.