மதுரை என்றாலே நமக்கு தோன்றும் வெட்டு, குத்து, கஞ்சா, குடி, புகை, பொண்ணுங்க என அனைத்தையும் இந்த படத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.
ஹரிஷ், ராமகிருஷ்ணன், ரகுவண்ணன், பிரகாஷ் என 4 இளைஞர்களை பற்றிய கதைதான். இவர்கள் 4 பேரும் கதையின் நாயகர்களாக நடித்திருக்கிறார்கள். நாயகிகளாக மாயாண்டி குடும்பத்தார் நடித்த பூங்கொடி மற்றும் சுவாசிகா. இந்த இளைஞர்களுடன் சிங்கம்புலி, மயில்சாமி சேர்ந்து கஞ்சா, குடி, புகை என கூத்தடிக்கிறார்கள்.
மாயாண்டி குடும்பத்தார் வெற்றி படங்களை இயக்கிய இராசு.மதுரவன் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். நாடோடிகள் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.
பொதுவாக வில்லன்களை அடித்து, தூரத்தும் ஹீரோக்களையே பார்த்து பழகியவர்களுக்கு, இந்த ஹீரோக்கள் கொஞ்சம் வித்தியாசப்படுவார்கள். இவர்கள் வில்லன்களுக்கு பயந்து ஓடுவதும், இதனால் ஏற்படும் வலியும்தான் இந்த படத்தின் கதை.
இந்த படத்தில் ஒவ்வொரு இளைஞர்களுக்கு பின்பும், ஒரு சோகமான மூலக்கதை சொல்லி, அதனுடன் காதலையும் கலந்து சொல்லியிருக்கிறார் இப்படத்தின் இயக்குனர்.
படிக்கின்ற வயதிலேயே அப்பன்காரன் சிகரெட், மதுவை வாங்கி வரச்சொல்லிப் பழக்கியதால், இதற்கு அடிமையாகிறான் ஹரீஷ். மற்றொருவரின் அம்மா தன்னைவிட வயது குறைந்த பக்கத்து வீட்டுப் பையனுடன் ஓடிப் போகும், இதனால் அவனது தந்தை தற்கொலை செய்துக்கொள்கிறான். பிறந்த உடனேயே குப்பைத்தொட்டியில் தூக்கி விசப்படுகிற ராமகிருஷ்ணன் மற்றும் இவர்களுக்கு தண்ணிக்கும், தம்முக்கும் காசு கொடுக்கும் பணகாரான ஒரு நண்பன்.
ரகுவண்ணன், ஹரிஷுடைய உறவினரான சுவாசிகாவை காதலிக்கிறார். இது தெரியாமல் சுவாசிகாவை விரும்புகிறார் ஹரிஷ். சுவாசிகாவை திருமணம் செய்த பிறகு, தனது மனைவி நண்பனோட காதலின்னு தெரிஞ்சதும், சுவாசிகாவின் தாலியை அறுத்து தன்னுடைய நண்பனுடன் சேர்த்துவைக்கிறான் ஹரிஷ். இதை தட்டி கேட்ட ஊர்மக்களிடம் இவள் என்னுடைய மனைவி இதை தட்டிக்கேட்க யாருக்கும் உரிமை இல்லை என்று யாதர்தமாக கூறுகிறான்.
இதற்கு இடையில் ராமகிருஷ்ணன், பூங்கொடி காதல் பற்றி சொல்லியிருக்கிறார். ராமகிருஷ்ணன் தூங்கும் இடம் பார்த்து வந்து பூங்கொடியின் நாய், அவர் முகத்தில் மூத்திரம் அடிக்கிறது. அதுவே நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாருகிறது. ராமகிருஷ்ணன், பூங்கொடியை பார்க்க அவள் வீட்டிற்கு வருகிறான். எப்போதுமே தான் அனாதை என்றே நினைத்துக் கொண்டிருந்தவனை டைனிங் டேபிளுக்கு அழைத்து வந்து அமர வைத்து சாப்பிடச் சொல்லுகிறாள். உணர்ச்சிவசப்பட்டு காதலனை கட்டிப்பிடிக்கிறாள் பூங்கொடி அதன்பிறகு இவர்களிடையே உடலுறவும் ஏற்படுகிறது.
இந்த படத்தில் மயில்சாமி, சிங்கம்புலியின் காமெடி ஒரளவுக்கு சிரிக்க வைக்கிறது.
சபேஷ்-முரளி இசை. என்ன இந்த மாற்றமோ.., அழகு காட்டேரி.. என இரு டூயட் பாடல்கள் சுமார். பாலபரணி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.