
Written by: JBR
நல்ல சினிமா தன்னை சுற்றியுள்ள சமூகத்தை பாதிக்கவேண்டும். சேரனின் 'தவமாய் தவமிருந்து' அளவுக்கு அதிகமாகவே (சேரனையும் சேர்த்து) பலரை பாதித்திருக்கிறது.
பாப்புலர் பத்திரிகைகள் இத்திரைப்படத்தை எதிர்கொண்ட விதம் கவனிக்கத்தக்கது. ஆபாசம், இரட்டை அர்த்த வசனங்கள், அடிதடிகள் ஏதுமற்ற சினிமா என இப்படத்தை பாராட்டுகின்றன. மேலே சொன்ன அம்சங்கள் இல்லாத காரணத்தினாலே ஒரு திரைப்படம் நல்லதிரைப்படம் என்று சொல்வதிற்கில்லை. மேலும், கற்பு, ஒழுக்கம், தேசபக்தி இவற்றுடன் சேரனின் சினிமாவையும் இவர்கள் சேர்த்துக்கொண்டார்களா என்ற ஐயமும் எழுகிறது.
காரணம், படத்தை குறித்து எதிர் கருத்து கூறினாலே ஏறிமிதிக்க காத்திருக்கிறார்கள். இணையதளம் ஒன்றில் விமர்சகர் எழுதிய கருத்துக்கு காரணம் இல்லாமலே கோபித்துக்கொண்டிருக்கிறார் சேரன். ஆனால், பாப்புலர் இதழ்களின் பாராட்டுக்களைவிட குறைகளை சுட்டிக்காட்டும் விமர்சனங்களே ஒரு கலைஞனை மெருகேற்றும். காட்சிகளின் சுவாரஸியத்தில் பார்வையாளன் தவறவிடும் அம்சங்களை விமர்சனங்களே சுட்டிக்காட்டுகின்றன.
அந்த வகையில் 'தவமாய் தவமிருந்து' படத்தின் கதைக்களம், காலக்கட்டம் டிஜிட்டல் ஒளிப்பதிவு மற்றும் படத்தின் நீளம் ஆகியவற்றை அலசும் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளன. ஆர்வம் மிக்க வாசகர்கள் படித்து தங்கள் அபிப்ராயங்களை திருத்திக்கொள்ளாலம்.
இணையதள முகவரிகள்:
Thinnai-1 http://www.maraththadi.com/article.asp?id=2818
Thinnai- 2 http://www.maraththadi.com/article.asp?id=2822
http://thoughtsintamil.blogspot.com/2005/12/blog-post_113582564067178077.html
http://urpudathathu.blogspot.com/2005/12/blog-post_04.html
http://arunhere.com/pathivu/?p=141
|
Feedback!
|
|